Friday, April 17, 2009

மனதை நெருடியவை...

எங்களது சம்பளம்
உங்கள் கண்களை உறுத்தியது...
வாழ்க்கை முறை கண்டு 
வயிறு எரிந்தீர்கள்...
கலாசாரத்தை கெடுத்தோம் 
என்றொரு புகாரும் உண்டு...
பப்பூ'களில் புகுந்து உதைத்தீர்கள்...
சினிமா எடுத்தீர்கள்...
பத்திரிகைகளில் கிழிதீர்கள்...
பெண் கொடுக்க மறுத்தீர்கள்... 
எங்கள் சம்பாதியத்தின் 
பெரும் பகுதியை வரி என புடுங்கினீர்கல்...
நங்கள் அந்நிய தேசங்களில் இருந்து
ஈட்டி வந்த பணத்தில் 
பாலங்கள் கட்டினீர்கள் 
"இந்திய ஒளிர்கிறது" என விளம்பரம் செய்தீர்கள்...
இதோ கும்பல் கும்பலாக
நடுத்தெருவுக்கு வந்துவிட்டோம்
சந்தோசம் தானே சகோதரர்களே ???
உங்கள் சட்டைகளை பற்றிக் கேட்கிறோம்...
"கணீனிமொழி கற்றதன்றி
வேறென்ன பிழை செய்தோம்?
-- ஆனந்த விகடனில் -> செல்வெந்திரன்

1 comment: